திருமலை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு. இவர் விஜயவாடாவில் இருந்து ஐதராபாத் நோக்கி நேற்று காரில் சென்றார். காருக்கு முன்னும் பின்னுமாக பாதுகாப்பு வாகனங்களில் போலீசார் வழக்கம்போல் சென்றனர். தெலங்கானா மாநிலம், யாதாத்திரி புவனகிரி மாவட்டம், தண்டுமல்கபுரம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே மாடு ஒன்று திடீரென வந்துள்ளது.