மேற்கு வங்கத்தில் மேலும் புதிதாக 3,042 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,042 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,74,659 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,50,801 ஆக உயர்ந்துள்ளது. 23,390 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவால் 3,510 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: