சென்னை: ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீட்டை வாடகைக்கு வாங்கி, குடோனாக மாற்றி குட்காவை பதுக்கிய வியாபாரியை போலீசார் தேடுகின்றனர். ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பதாக ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்திக்கு நேற்று அதிகாலை ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், போலீசார் அங்கு தீவிர விசாரணை நடத்தினர். மேலும், போலீசார் வீட்டு உரிமையாளர் முன்னிலையில் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.