தாம்பரம்: தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (35), திமுக பிரமுகர். இவர் நேற்று இரவு ஆதனூர் - ஊரப்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கு 3 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள், இவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.