சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் 105 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி, கந்தசாமி நாயுடு ஆண்கள் கல்லூரி, செல்லம்மாள் மகளிர் கல்லூரி உள்ளிட்ட 6 கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. பச்சையப்பன் அறக்கட்டளையில் முறைகேடுகள் நடப்பதாக பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, அறக்கட்டளை உறுப்பினர்கள் தேர்தலை நடத்த வேண்டும். அதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகத்தை அறக்கட்டளை தலைவராக நியமித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சிலர், உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க டிவிசன் பெஞ்ச் மறுத்து விட்டது.
பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் 105 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: ஓய்வுபெற்ற நீதிபதி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
- உயர் நீதிமன்றம்
- உதவி பேராசிரியர்கள்
- நீதிபதி
- பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகள்: ஓய்வு பெற்றவர்
- கல்லூரிகள்
- பச்சையப்பன் அறக்கட்டளை