நாகை: உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா வருகின்ற 29ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் , கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மேரி அன்னை ஆலய ஆண்டு திருவிழா வருடாவருடம் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மேரி அன்னையை வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதையடுத்து கொரோனா காரணமாக எந்த நாளிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று தேவாலயம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.