மது குடித்ததை தட்டி கேட்ட தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு

சோளிங்கர் : ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே கோயில் முன்பு மது குடித்ததை தட்டி கேட்ட தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. குப்பல்மேடு கிராமத்தில் தந்தை பெரியசாமி,அவரது மகன் லோகேஷை அரிவாளால் வெட்டிய கும்பல் தப்பியோடியது. அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த தந்தை, மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: