கொரோனா சிகிச்சைக்கு அழைத்தபோது சாமி ஆடிய பெண்: சமூக வலைதளங்களில் வைரல்

பெங்களூரு: கொரோனா பாதித்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வந்தபோது  சாமி ஆடிய சம்பவம், கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக  மாநிலம், தாவணகெரே மாவட்டம், ஹொன்னாலி தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள  பெண்ணுக்கு கொரோனா ெதாற்று பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிது. இதை  ெதாடர்ந்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல  ஆம்புலன்சுடன் வந்தனர். அப்போது, அவர் சாமி ஆடினார்.

இதை பார்த்து  அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அப்படியே நின்று விட்டனர். ‘அம்மனை கொரோனா ஒன்றும் செய்யாது,’ என்று அவர் கூச்சலிட்டார். ஆம்புலன்ஸ் ஊழியர்களை  ஓடிவிடும்படி கூறினார். பின்னர், ஒருவழியாக ஊழியர்கள் அவரை ஆம்புலன்சில் ஏற்்றி சென்றனர்.  கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் இந்த  சம்பவம் நடந்துள்ளது. தற்போது, இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில்  வைரலாக பரவி வருகிறது.

Related Stories: