கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் எதிர்பார்ப்பெல்லாம் பாராட்டுதான்: பிரதமர் மோடி கடிதத்துக்கு தோனி நன்றி

டெல்லி : சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த கிரிக்கெட் வீரர் தோனிக்கு பிரதமர் மோடி இரண்டு பக்க வாழ்த்துச் செய்தியை அனுப்பி இருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் அனுப்பிய அந்த வாழ்த்து மடலை ட்விட்டரில் பகிர்ந்த தோனி கலைஞன், ராணுவ வீரர் மற்றும் விளையாட்டு வீரர் போன்றவர்கள் எப்போதுமே விரும்புவது அவர்களது கடின உழைப்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும் மக்கள் எல்லோரிடமிருந்தும் கிடைக்கின்ற பாராட்டுகளை தான்.என்னை வாழ்த்தியமைக்கும், பாராட்டியமைக்கும் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி, எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: