வாஜ்பாய் நினைவு நாள்: தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 2ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. பாஜ தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய், 2018ம் ஆண்டு உடல் நலக்குறைவுக் காரணமாக காலமானார். அவரின் 2ம் ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. வாஜ்பாயின் நினைவிடமான, ‘சைதவ் அடல்’லில் நேற்று காலை அவரின் குடும்பத்தினர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘நாட்டின் வளர்ச்சிக்கு வாஜ்பாய் அளித்த பங்களிப்பு மிகவும் உயர்ந்தது,’ என கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட பதிவில், ‘வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தான் நாடு முழுவதும் சிறந்த நல்லாட்சியை மக்கள் கண்டனர். அதேபோல், தற்போது மோடி ஆட்சியும் செய்து வருகிறது,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: