அண்ணாநகர்: அண்ணாநகரை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணின் செல்போனுக்கு சில நாட்களாக ஒரு புதிய எண்ணில் இருந்து ஆபாச படங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண் அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டபோது, எதிர் முனையில் பேசிய வாலிபர், ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுபற்றி இளம்பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில், இளம் பெண்ணின் தாய் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் அறிவுறுத்தியபடி அந்த இளம்பெண் செல்போனில் அந்த வாலிபரை தொடர்பு கொண்டு தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.