பொன்னேரி: பழவேற்காடு பகுதியில் ஜெகதாம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த முகுந்தன் (71). என்பவர் தற்காலிக காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து காவலாளி முகுந்தனை கட்டிப்போட்டு பள்ளி கதவை உடைத்து பள்ளியில் இருந்த 14 லேப்டாப் மற்றும் டிவியை திருடி சென்றனர். காவலாளி முகுந்தனின் சத்தம் கேட்டு பள்ளி அருகே உள்ள பொதுமக்கள் வந்து அவரை மீட்டு விசாரித்தபோது பள்ளியில் லேப்டாப்கள் மற்றும் டிவியை திருடியது தெரியவந்தது.