சென்னை: அபுதாபியிலிருந்து சென்னைக்கு ஏர்இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்று அதிகாலை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது, தஞ்சாவூரை சேர்ந்த சாமிநாதன் கண்ணன் (41), தங்கவேல் சிவசங்கர் (49), திருச்சியை சேர்ந்த கமலூதீன் ஷாஜகான் (57) ஆகிய 3 பேர் உள்ளாடைக்குள் தங்கக்கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.22 லட்சம் மதிப்புடைய 402 கிராம் தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். பிறகு மூவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அபுதாபியிலிருந்து இந்தியாவிற்கு விமானத்தில் வருவதற்கு, விமான டிக்கெட் எடுப்பதற்கு பணம் இல்லாமல் தவித்துள்ளனர்.