சேலம்: மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 6 அடி வரை உயர்ந்துள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீர் திறப்பு காணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நேற்று இரவு வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக நீர் வரத்து வந்துகொண்டிருந்த நிலையில், இன்று காலை 90 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று காலை 70.05 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர், இன்று காலை 75.83 அடியாக உயர்ந்துள்ளது.