ஆம்பூர் அருகே லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேசன் அரிசி பறிமுதல்

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாதனூர் சோதனைச்சாவடி வழியாக பெங்களூர் நோக்கி சென்ற லாரியை வருவாய்துறையினர் சோதனை மேற்கொண்டதில் 15 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையின்போது தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories: