ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் கலாம் நினைவிடத்தில் குடும்பத்தினர் அஞ்சலி

ராமேஸ்வரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம், ராமேஸ்வரம் பேக்கரும்பிலுள்ள அவரது நினைவிடத்தில் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி காலை 9.30 மணியளவில் கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதீன் தலைமையில் கலாம் நினைவிடத்திற்கு சென்ற உறவினர்கள், ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் கலாம் சமாதி முன்பு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மிகவும் எளிமையாக நடந்த நிகழ்ச்சியில் கலாமின் அண்ணன் மகள் நசீராபேகம், பேரன் ஷேக்சலீம் மற்றும் உறவினர்கள்பங்கேற்றனர்.

Related Stories: