ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மின் கம்பி ஆபத்தான நிலையில் தாழ்வாக செல்வதால், அச்சமடைந்த பொதுமக்கள் விரைந்து சரி செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே செட்டியமடை கருப்பன் கோவில் பகுதியில் சாலையின் அருகே மின் கம்பி தாழ்வாக செல்கிறது. இதனால் உயிர் சேதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் மக்கள், சிறிய கவனகுறைவாக எதிர்பாராத விதமாக கைகளை தூக்கினால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.