புனே: மராட்டியத்தில் தமிழ் தலைமையிலான அரசை கவிழ்க்க முடியுமா என்று பாரதிய ஜனதாவுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சவால் விடுத்துள்ளார். சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னா பத்திரிகையில் அந்தக் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிர மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே நேர்காணல் அளித்தார். அப்போது அவர் விடுத்துள்ள செய்தியில், ஆகஸ்ட் மாதத்திற்குள் கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று பாரதிய ஜனதா ஏற்கனவே கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார். மராட்டியத்தில் ஆளும் மெகா மூன்று கட்சி கூட்டணி ஏழை, எளிய மக்களுக்கு பாடுபடும் அரசு என்று உத்தவ் தாக்கரே பெருமிதம் தெரிவித்துள்ளார்.