கூடுவாஞ்சேரி: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (72). வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் பிரதான சாலையோரத்தில், டாஸ்மாக் கடை அருகே சொந்தமாக சென்ட்ரிங் கடை நடத்தி வந்தார். அங்கேயே தங்கினார்.
இந்நிலையில், நேற்று காலை அவரது கடைக்கு சென்ட்ரிங் பொருட்களை எடுப்பதற்காக மேஸ்திரிகள் வந்தனர். அப்போது, கடை பூட்டி இருந்தது. பின்னர், அதே பகுதியில் வசிக்கும் அவரது மகன் தனசேகருக்கு போன் செய்தனர். அதன்பேரில் அவர் வந்து, கடையை திறந்து பார்த்தபோது, வேல்முருகன் நிர்வாணமாக, ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.