டெல்லி : உலகில் பெரும் சவாலாக உள்ள பருவநிலை மாறுப்பாட்டை எதிர்க்கொள்ள மரம் நடுவதே ஒரே தீர்வு என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். புதுடெல்லியில் இன்று மரம் நடும் இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார். மேலும் சுற்றுசூழல் பூங்கா மற்றும் சுற்றுலா தளங்களுக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கலந்து கொண்டார். நாடு முழுவதும் பல்வேறு 10 மாநிலங்களிலும் உள்ள 38 மாவட்டங்களில் அடங்கிய 150 இடங்களில் காணொளி காட்சி மூலம் மரம் நடும் விழாவிற்கு மத்திய சுரங்கதுறை ஏற்பாடு செய்திருந்தது.