ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்த 500க்கும் மேற்பட்டவர்களில் 250க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 250க்கும் மேற்பட்டோர் ஊட்டி அரசு மருத்துவமனை, குன்னூர் அரசு மருத்துவமனை, குட்செபர்டு பள்ளி, லாரன்ஸ் பள்ளியில் உள்ள சிறப்பு முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு நோயாளிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளது.
இதில் லாரன்ஸ் பள்ளி சிறப்பு முகாம்களில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு ஆடைகள், மருத்துவ உபகரணங்கள் பொது வெளியில் கிடப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.