மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி


திருப்பூர்: அவிநாசி அருகே நேற்று பெய்த பலத்த மழையின் போது, மின்னல் தாக்கி 3 மாடுகள் பலியாகின. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பொன்னேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (75), விவசாயி. இவர் தனது தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை முதல் இரவு வரை மாவட்டத்தில் பரவலாக இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் மழையின் காரணமாக நேற்று கொட்டகையில் மாடுகளை முருகேசன் கட்டி வைத்திருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் கொட்டகையில் கட்டி வைத்திருந்த 2 சினை மாடு உட்பட 3 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. உயிரிழந்த மாடுகளின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

The post மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி appeared first on Dinakaran.

Related Stories: