உ.பி. முதல்வர் அலுவலகம் முன் தீக்குளித்த பெண் சாவு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகம் அருகே தீக்குளித்த பெண் இறந்தார். உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி மாவட்டத்தை சேர்ந்தவர் சபியா (50). நில தகராறு வழக்கில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கடந்த 17ம் தேதி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகம் முன் தனது மகளுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சபியா, நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் உள்ள அவரது மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக லக்னோ காவல்துறை ஆணையர் சுஜீத் பாண்டே கூறுகையில், “ இந்த சம்பவம் ஒரு குற்ற சதி. சிலர் சபியாவையும் அவரது மகளையும் தூண்டி விட்டுள்ளனர். இவர்கள் இருவரும் உத்தரப்பிரதேச காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்று அனுப் படேலை சந்தித்துவிட்டு வந்த பிறகுதான், தீக்குளித்து உள்ளனர். அதற்கான ஆதாரங்கள் உள்ளன,” என்றார்.

Related Stories: