உடன்குடி: உடன்குடி பகுதியில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக நேற்று (21ம்தேதி) முதல் வரும் 26ம்தேதி வரை 6 நாட்கள் முழு ஊரடங்கு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்த முழு ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது. இதன்காரணமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்துக் கடைகளும் முழுமையாக மூடப்பட்டுள்ளன.