உடன்குடியில் 6 நாள் முழு ஊரடங்கு அமல்; மதுக்கடைகளும் மூடல்

உடன்குடி: உடன்குடி பகுதியில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக நேற்று (21ம்தேதி) முதல் வரும் 26ம்தேதி வரை 6 நாட்கள் முழு ஊரடங்கு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்த முழு ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது. இதன்காரணமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்துக் கடைகளும் முழுமையாக மூடப்பட்டுள்ளன.

மேலும் நகர பகுதியில் உள்ள 4 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் உடன்குடி பஜார் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. இதனிடையே குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் ராதிகா தலைமையிலான போலீசார் உடன்குடி பகுதி முழுவதும் ரோந்து வாகனத்தில் வலம்வந்தபடி ஒலிபெருக்கி மூலம் கொரோனா குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: