புதுடெல்லி: ‘நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பங்களுக்கு எவ்வளவு நிதியுதவி வழங்கப்படுகிறது?’ என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா மற்றும் ரவீந்தர் பட் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் உத்தரவில், “நாடு முழுவதிலும் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு மத்திய அரசு எவ்வளவு நிதியுதவி வழங்குகிறது?