தாம்பரம்: ‘அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்’ என்று தமிழ் தென்றல் திரு.வி.கவால் புகழப்பட்ட மறைமலையடிகள், தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் புலமை பெற்றவர். 4 ஆயிரம் நூல்களுடன் தன் வீட்டிலேயே நூலகம் அமைத்து தமிழமையும், சைவத்தையும் இரு கண்களாக கொண்டவர். 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். பல ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய பின்பு பல்லாவரத்தில் ராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி ‘சமரச சுத்த சன்மார்க்க சங்கம் தொடங்கி, பின்னர் தனித்தமிழ் ஈடுபாட்டால் அதனை ‘பொதுநிலை கழகம்’ என பெயர் மாற்றி அதன் மூலமாக பல நூல்களை வெளியிட்டவர்.