டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ளதாக குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார். அவர் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எப்போது? தொடங்கும் என்பது குறித்து தெரிவித்துள்ளார். மார்ச் 23ம் தேதியுடன் நிறைவடைந்த பட்ஜெட் கூட்டத்தின் கடைசி அமர்வு நடைபெற்ற 6 மாதங்களுக்குள், அடுத்த கூட்டத்தொடர் நடக்கவேண்டும் என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.