பாபநாசம்: பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் ஏலத்தில் பங்கேற்பதற்காக பருத்தி பஞ்சுகளை வைக்க போதிய இடமில்லை. இதனால் தற்காலிகமாக புதிய குடோன் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம் கடந்த வாரம் நடந்தது. இதில் பங்கேற்க பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மட்டுமின்றி திருவாரூர், வலங்கைமான், குத்தாலம், ஆடுதுறை, ஒரத்தநாடு, திருவிடைமருதூர், பூந்தோட்டம், எரவாஞ்சேரி உள்ளிட்ட வெளியூரை சேர்ந்த விவசாயிகளும் பருத்தி பஞ்சுகளை கொண்டு வந்தனர்.