அனந்த்நாக்: ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் ஸ்ரீகுப்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கயிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மத்திய பாதுகாப்பு படையினர் , ராணுவத்தின் ராஷ்டிரிய ரைபில்ஸ் பிரிவு மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே 6 மணிநேரத்திற்கும் மேலாக மோதல் நடந்தது. இதில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் முதலில் சுட்டு கொல்லப்பட்டான்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை..: பாதுகாப்பு படையினர் அதிரடி
- பயங்கரவாதிகள்
- ஜெய்ஷ்-இ-முகமது
- பாதுகாப்பு படைகள்
- இரண்டு
- மாவட்டம்
- காஷ்மீர்
- ஜம்மு
- அனந்த்நாக்
- ஆனந்த்நாக்