கனமழையால் கீழடியில் அகழாய்வு நிறுத்தம்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூரில் கொரோனா ஊரடங்கால் 2 மாதமாக நிறுத்தப்பட்ட அகழாய்வு பணிகள் கடந்த மாதம் மீண்டும் துவங்கி நடந்து வருகின்றன. திருப்புவனம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. திருப்புவனத்தில் 80.2 மி.மீ. மழை பதிவானது. மழையால் கீழடி, அகரம், கொந்தகை, மணலூரில் அகழாய்வு குழிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் மழைநீரை வெளியேற்றும் பணியிலும், குழிகளில் உள்ள ஈரப்பதத்தை உலர வைக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இன்றும் இப்பணி நடைபெறுவதால் அகழாய்வு பணி நிறுத்தப்பட்டது.

Related Stories: