மும்பை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் வீட்டுக் கடன் வசதி நிதி நிறுவனம் ஒன்று ரூ.3,688 கோடி கடன் வாங்கி மோசடி செய்திருப்பது அம்பலம் ஆகி உள்ளது. டிஎச்எப்எல் என்று அழைக்கப்படும் தேவன் வீட்டு கடன் வசதி நிதி நிறுவனம் மும்பைக் கிளையில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் போனதால் ரூ.3,688 கோடியை வாராக்கடன் பட்டியலில் சேர்த்திருப்பதை இந்திய ரிசர்வ் வங்கிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி முறைப்படி தெரிவித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி போன்ற பல வங்கிகளில் தேவன் வீட்டுக் கடன் வசதி நிறுவனம் பல ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்திருப்பதும் அம்பலம் ஆகியுள்ளது.