நெல்லூர்: நெல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த வெங்கடகிரியை சேர்ந்த நபர் ஒருவர் உட்பட மூன்று பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தனர். இன்று அதிகாலை அவர்களுடைய உடல்களை பென்னா நதிக்கரைக்கு கொண்டு சென்ற நகராட்சி ஊழியர்கள் ஆம்புலன்சில் இருந்து அங்கு தயாராக வரவழைக்கப்பட்ட ஜேசிபி எந்திரத்தில் மண் எடுக்க பயன்படும் பகுதிக்குள் தூக்கி வீசினர். தொடர்ந்து ஜே.சி.பி இயந்திரத்தை ஓட்டி சென்ற டிரைவர் அங்க வெட்டி வைக்கப்பட்டிருந்த குழியில் ஜேசிபியில் இருந்து அந்த உடல்களை போட்டார்.