புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா இருப்பதாக கூறி பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 15ம் தேதியன்று, டெல்லியில் இருந்து ஷிகோகாபாத்திற்கு சென்றுகொண்டிருந்த பேருந்தில், அன்ஷிகா யாதவ்(19) என்ற இளம்பெண் தனது தாயுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் அப்பெண்ணிடம் இருந்ததாக சக பயணிகள் சந்தேகமடைந்துள்ளனர். இதுகுறித்து, ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு தகவல் தெரிவித்த தையடுத்து யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்தி ஓட்டுநரும், நடத்துநரும் சேர்ந்து அப்பெண்ணை வெளியே தூக்கி வீசியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பெண் அடுத்த 30 நிமிடங்களில் சாலையிலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது இதனை காலம் வெளியுலகிற்கு தெரியாத நிலையில், தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.