காளையார்கோவில்: காளையார்கோவில் ஒன்றியத்தில் அதிகப்படியான மக்கள் விவசாயத்தைச் சார்ந்தே வாழ்கின்றனர். விளைநிலங்களில் சீமை கருவேலமரங்களின் அதிகப்படியான வளர்ச்சி காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தைச் சுத்தம் செய்யும் நிலை ஏற்படுகிறது. இதனால் மண் மலட்டுத் தன்மை ஆவதுடன் நிலத்தடி நீரும் அதிகளவு உறிஞ்சப்படுவதினால் விளைச்சல் பாதிப்படைகிறது. சீமைக் கருவேல மரங்களை வேருடன் அழித்தால் மட்டுமே விளைநிலங்களை காப்பாற்ற முடியும். இதற்கான இயந்திரச் செலவு அதிகமாக இருப்பதால், போதிய வசதியில்லாத விவசாயிகள் அழிக்காமல் விட்டுவிட்டனர். இதை கருத்தில் கொண்டு சில வருடத்திற்கு முன் சீமைகருவேலா மரங்களை அழிப்பதற்கு அரசு முன்வந்து தாலுகா அலுவலகத்தின் மூலமாக ஏலம் விடப்பட்டன.