சென்னை: மத்திய மின்சார துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார். தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடியுடன் இன்று மதியம் சந்தித்து பேசிவிட்டு மாலையே டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். மத்திய மின்சாரத்துறை அமைச்சா் ஆர்.கே.சிங் இன்று காலை 8 மணிக்கு தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு சென்னை, உள்நாட்டு விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து நேராக சென்னை தலைமை செயலகம் சென்று மதியம் 12 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. பின்பு இன்று மாலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் டெல்லி புறப்பட்டு செல்வார் என்று கூறப்படுகிறது.