ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் கொரோனாவால் உயிரிழப்பு; உடலை வாங்க பயந்து உறவினர்கள் யாரும் வராததால் ஆம்புலன்ஸ் நிறுத்திவைப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் கொரோனாவால் உயிரிழந்தார். நேற்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  பி.எஸ்.என்.எல். ஊழியர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழப்பது இதுவே முதல்முறை ஆகும். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிரஞ்சனின் உடலை வாங்க பயந்து உறவினர்கள் யாரும் வராததால் தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: