திருப்பத்தூர் அருகே குடிபோதையில் சண்டை போட்ட கணவனைக் கொல்ல மனைவி முயன்றதாக குற்றம் சாட்டு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே குடிபோதையில் சண்டை போட்ட கணவனைக் கொல்ல மனைவி முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குடிப்பதற்காக கணவர் வெங்கடேஷ் பணம் கேட்டு மனைவி ராஜேஸ்வரியிடம் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். அத்திரம் அடைந்த ராஜேஸ்வரி தூங்கிக்கொண்டிருந்த கணவன் தலையில் கல்லைப்போட்டு கொல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த கணவர் வெங்கடேஷ் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Related Stories: