சர்வதேச விமான சேவை 31 வரை ரத்து

புதுடெல்லி: கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாட்டின் விமானப் போக்குவரத்து கடந்த மார்ச் 23ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. பின்னர், வெளி நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்து வர `வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம், வழக்கமாக இயக்கப்படும் சர்வதேச விமான சேவை ஜூலை 15ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த 26ம் தேதி விமானத்துறை அறிவித்தது. இதை ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து நேற்று அது உத்தரவிட்டது.

Related Stories: