புதுடெல்லி: கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில் திட்டமிட்டபடி நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகளை இம்மாதம் நடத்த முடியுமா என்பது ஆய்வு செய்து வருவதாக மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் 26ம் தேதியும், பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு வரும் 18-23ம் தேதி வரையிலும் நடத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், தற்போது கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் நீட், ஜேஇஇ தேர்வுகளையும் ஒத்தி வைக்க வேண்டுமென பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.