கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் மற்றும் சுருளிப்பட்டியைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் நிக்சய், ரூபேஷ், பொறியியல் பட்டதாரி மாணவர்கள் அப்துல் வாஜீத், ஜெயகாந்தன், மோகன். இவர்கள் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊடகவியலாளர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோரை கவுரவிக்கும் வகையில் இணையதளம் மூலம் நாடு முழுவதும் 400 பேரை தேர்வு செய்து, குறிப்பு மட்டுமே கொடுத்து படம் வரைய கூறினர். அதன்படி 400 பேரும் குறிப்புகளின்படி சார்ட் பேப்பரில் படம் வரைந்து, இணையத்தில் பதிவேற்றினர். கடந்த மே 23ல் தொடங்கிய இந்த படம் வரைதல் நிகழ்வு, ஜூன் 20ல் முடிந்தது.