போபால்: வெளிநாட்டவருக்கு பிறந்தவர், தேசபக்தராக இருக்க முடியாது என பாஜ எம்பியான பிரக்யா தாகூர் மறைமுகமாக ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பாஜ எம்பி. பிரக்யா தாகூர். இவர் சர்ச்சை கருத்துக்களுக்கு பிரபலமானவர். மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். இதனால் கட்சியின் தலைமையால் கண்டிக்கப்பட்டு சிறிது காலம் அமைதியாக இருந்தார். தற்போது மீண்டும் அவர் தன்னுடைய சர்ச்சை கருத்துகளை கூற தொடங்கி உள்ளார்.