டெல்லி: இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் வைரஸின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும் என்று சிலர் கணித்திருந்தனர். ஊரடங்கு, அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பல முயற்சிகள் மற்றும் மக்களால் இயக்கப்படும் போராட்டம் காரணமாக, இந்தியா மற்ற பல நாடுகளை விட மிகச் சிறந்த இடத்தில் உள்ளது. இந்தியாவின் மீட்பு விகிதம் உயர்ந்து வருகிறது என பிரதமர் மோடி உரையாற்றினார். 8 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு புகை இல்லாத சமையலறைகள் உள்ளன. வீடற்றவர்களுக்கு தங்குமிடம் வழங்க 1.5 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன என தெரிவித்தார்.