ஆவடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் தடையை மீறி கடையை திறந்து வியாபாரம் செய்வதாகக்கூறி வணிகர்கள் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்கு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர், அவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் பிறகு அவர்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை அளிக்காமல் பொய் வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். அதில், அவர்கள் இருவரும் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் வணிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இச்சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடையடைப்பு நடத்தப்படும் என அதன் தலைவர் விக்கிரமராஜா அறிவித்தார்.
சாத்தான்குளம் வணிகர்கள் மர்மச்சாவு சென்னை புறநகர் பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் அடைப்பு: மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
- சென்னை புறநகர்
- சாத்தான்குளம் வணிகர்கள் மர்மச்சாவ் அத்தியாவசிய கடைகள்
- மெழுகுவர்த்தி சுமந்து செல்லும் அஞ்சலி
- வர்த்தகர்கள்
- புறநகர்
- சாத்தான்குளம்
- கடைகள்