திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.57 லட்சம் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். கொரோனா தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. இதில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் தவிர மற்ற சில மாநிலங்களில் உள்ள கோயில்களில் குறைந்த எண்ணிக்கையில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டனர்.