சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் மதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த நன்மாறன் மற்றும் சுரேஷ் ஆகியோர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த மனுவில், தனது பெயரில் போலி டிவிட்டர் கணக்குகள் தொடங்கி தனக்கும் தன் கட்சிக்கும், தனது தோழமை கட்சிகளுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை காவல் ஆணையர் கேட்டுக் கொள்கிறேன்.