சென்னை: போலி இ-பாஸ் வழங்கியதாக சென்னை மாநகராட்சி ஊழியர், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரூ. 3,000 முதல் 5,000 வரை பணம் பெற்றுக்கொண்டு தயாரித்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகராட்சி, தலைமைச் செயலக அலுவலக ஊழியர்கள் 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்குவது தொடர்பாக 2 வருவாய் ஆய்வாளர் உட்பட 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டு போலி இ-பாஸ் வழங்குவதாக ஏற்கனவே கடந்த 2 மாதங்களாக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் திட்டவட்டமாக மறுத்து வந்தனர். இந்த நிலையில் போலி இ-பாஸ் வழங்குவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்த வருவாய்துறையை சேர்ந்த குமரன், உதயகுமார் உட்பட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.