திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருமழிசை பகுதியில் வாகன சோதனையில் ரூ3.8 லட்சம் பணம் மற்றும் 5 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, இருசக்கர வாகனத்தில் வந்த சென்னையை சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருமழிசை பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.