பெ.நா.பாளையம்: கோவை ஆனைகட்டி அருகே வாயில் காயத்துடன் சுற்றி திரிந்த காட்டு யானை பரிதாபமாக நேற்று உயிரிழந்தது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் கோபநாரி பிரிவு ஆணைகட்டி வடக்கு ஜம்பு கண்டி வனப்பகுதியில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று வாயில் காயத்துடன் சுற்றி வந்தது. இதனால் சாப்பிட முடியாமல் சிரமப்பட்டு வந்தது. வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமாரன் வரவழைக்கப்பட்டு யானைக்கு வலி நிவாரணி மற்றும் எதிர்ப்பு சக்தி மருந்துகள் பலாப்பழம் மற்றும் வாழைப்பழம் மூலமாக வழங்கப்பட்டது.