18வது வீரரை இழந்தது துணை ராணுவப்படை

புதுடெல்லி: துணை ராணுவத்தில் 18வது வீரரின் உயிரை கொரோனா பறித்தது.  உத்தரப் பிரதேச மாநிலம், பாக்பாத் பகுதியை சேர்ந்தவர் ஜிதேந்தர் குமார். மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலரான இவர், டெல்லியில் சட்டம், ஒழுங்கு பணியில் ஈடுபட்டு இருந்தார். கடந்த 10ம் தேதி அவர் மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.   இவருடன் சேர்த்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையில் மட்டுமே இதுவரை 6 வீரர்கள் கொரோனா பாதிப்பால் உயிர் இழந்துள்ளனர். மேலும், மத்திய ஆயுதப்படை போலீஸ் (சிஆர்பிஎப்), எல்லை பாதுகாப்பு படை, இந்தோ-திபேத் எல்லை போலீஸ், மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் சஷாஷ்டிரா சீமா பால் படை ஆகிய 5 துணை ராணுவ படைகளில் கொரோனாவால் இறந்த வீரர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: