புதுடெல்லி: துணை ராணுவத்தில் 18வது வீரரின் உயிரை கொரோனா பறித்தது. உத்தரப் பிரதேச மாநிலம், பாக்பாத் பகுதியை சேர்ந்தவர் ஜிதேந்தர் குமார். மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலரான இவர், டெல்லியில் சட்டம், ஒழுங்கு பணியில் ஈடுபட்டு இருந்தார். கடந்த 10ம் தேதி அவர் மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.