டேஸ்ட்டான உணவு கேட்டு கொரோனா வார்டில் தர்ணா

மதுரை: மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 600க்கும் மேற்பட்டோர்  சிகிச்சையில் உள்ளனர். சமீபகாலமாக மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தரமான உணவு கிடைக்கவில்லை என்று புகார் எழுந்தது. இந்தப்புகார் மாவட்ட கலெக்டர் வரை சென்றது. ஆனால், நடவடிக்கை இல்லை.  இந்நிலையில், கொரோனா மருத்துவமனையிலிருந்த நோயாளிகள், தரமான உணவு வழங்குங்கள் அல்லது வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவுப்பொருட்களை அனுமதியுங்கள் என்று கூறி  நேற்று திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை செவிலியர்கள்  சமாதானப்படுத்தினர்.

 கொரோனா மருத்துவமனையில் மட்டுமல்ல, சிறப்பு மையங்களில் தனிமைபடுத்துப்பட்டுள்ளவர்களுக்கும் உணவு வகைகளில் தரமில்லை என்று அமைச்சர் உதயகுமாரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இனியாவது அமைச்சர் தலையிட்டு, கொரோனா நோயாளிகளுக்கு தரமான உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் என்று நோயாளிகள் கோரிக்கை  வைத்துள்ளனர்.

Related Stories: