மதுரை: மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 600க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். சமீபகாலமாக மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தரமான உணவு கிடைக்கவில்லை என்று புகார் எழுந்தது. இந்தப்புகார் மாவட்ட கலெக்டர் வரை சென்றது. ஆனால், நடவடிக்கை இல்லை. இந்நிலையில், கொரோனா மருத்துவமனையிலிருந்த நோயாளிகள், தரமான உணவு வழங்குங்கள் அல்லது வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவுப்பொருட்களை அனுமதியுங்கள் என்று கூறி நேற்று திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை செவிலியர்கள் சமாதானப்படுத்தினர்.